காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. ஆளும் காங்கிரஸ் வழக்கம் போல அசோக் கெலாட்டை முதல் வர் வேட்பாளராக அறிவித்து அவ ரது தலைமையில் தேர்தலை எதிர் கொள்கிறது.
ஆனால் பாஜக முதல்வர் வேட்பாளர் அறிவிக்காமல் தேர் தலை சந்திக்க உள்ளது. இதற்கு காரணம் ராஜஸ்தான் பாஜகவில் நிலவும் உச்சகட்ட கோஷ்டி பூசல் ஆகும். ராஜஸ்தான் பாஜகவில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் ஒரு அணி, ஒன்றிய அமைச்சர்கள் தலைமை யில் மற்றொரு அணி என இரு அணி கள் உள்ளன. இதன்காரணமாகவே இன்னும் பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில் லையோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது வெளியாகி யுள்ள புதிய தகவலின் அடிப்படை யில் ராஜஸ்தான் பாஜக 2 கோஷ்டி யாக அல்ல, மொத்தம் 6 கோஷ்டி களாக பிரிந்துள்ளது என்பதுதான்.
பாஜக முதல்வர் வேட்பாளர் ரேஸில் வசுந்தரா ராஜே மட்டும் இல்லை. அவருடன் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகா வத், பாஜக மூத்த தலைவர்கள் பாலக்நாத், ராஜேந்திர ரத்தோர், சதீஷ் பூனியா, சி.பி.ஜோஷி என மேலும் 5 பேர் போட்டியில் உள்ள னர். வசுந்தரா ராஜே தவிர்த்து மற்ற 5 பேர் மற்றும் அவரது ஆதரவா ளர்கள் பிரதமர் மோடி பிரச்சா ரத்திற்கு வந்தால் மட்டுமே ஒன்றா கக் கூடுவார்கள். மற்ற நேரங்களில் 6 கோஷ்டிகளாக பிரிந்து பிரச்சா ரம் செய்வார்கள். இதில் வசுந்தரா ராஜே பிரதமர் மோடியின் கூட்டங் களில் கூட ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பதே முக்கியமான விஷயம் ஆகும்.
ராஜஸ்தான் பாஜகவில் இவ்வ ளவு பெரிய கோஷ்டி பூசல் இருந் தும், காங்கிரஸ் கட்சியில் முன்னர் இருந்த அசோக் கெலாட் - சச்சின் பைலட்டின் பகைமையை தற்போ தும் கூறி பாஜக பிரச்சாரம் செய் வது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அவர்கள் ஒரே மேடை யில் பிரச்சாரம் செய்கின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.