states

img

கோட்டா: நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுவந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முகமது ஜெய்த் (19) என்ற மாணவர், நேற்று இரவு தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வின் முதல் முயற்சியில் தோல்வியடைந்த ஜெய்த் தற்போது தனது இரண்டாவது முயற்சிக்கு தயாராகி வந்துள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி, மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2023-இல் கோட்டா பயிற்சி மையங்களில் நுழைவுத் தேர்வுகளுக்கு பெற்றுவந்த மாணவர்கள் 26 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;