states

img

நாட்டில் எமெர்ஜென்சி போன்ற நிலை உள்ளது

உத்தவ் தாக்கரே சாடல்

மும்பை, ஜன.24- நாட்டில் எமர்ஜென்சி போன்ற நிலையை உருவாக்கியுள்ள பாஜகவினர் தங்களைத் தாங் களே அழித்துக் கொள்வார்கள் என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே காட்டமாக கூறி யுள்ளார். தமக்கு நடந்த அறுவைச் சிகிச்சைக்குப்பின், கடந்த 2 மாதங் களாக உத்தவ் தாக்கரே ஓய்வில் இருந்து வந்தார். ஆனால், இந்தக் காலம் முழுவதும் பாஜக தொடர்ந்து அவரை கடுமையா கத் தாக்கியது. உத்தவ் தாக்கரே பதிலளிக்காத நிலையில், மேலும் மேலும் தாக்குதலைத் தீவிரப் படுத்தியது. இந்நிலையிலேயே, சிவ சேனா நிறுவனர் பால்தாக்கரே-வின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காணொலி முறை யில் தொண்டர்களிடம் உரை யாற்றிய உத்தவ் தாக்கரே, பாஜக வுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவின் இந்துத்துவா என்பது வெறும் சந்தர்ப்பவாத - போலியான இந்துத்துவா. அதி காரத்தைக் கைப்பற்ற மட்டுமே பாஜக அதைப் பயன்படுத்து கிறது. பாஜகவுடன் 25 ஆண்டு காலம் சிவசேனா கூட்டணி அமைத் திருந்தது. இப்போது அந்த 25 ஆண்டுகாலத்தை வீணாக்கி விட்டோமே என வருத்தப்படு கிறோம்.

கூட்டணியில் இருந்த போது எங்கள் மண்ணில் எங்க ளையே அழிக்க முயன்றது. சமீ பத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிவசேனா நான்கா வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்த போது இருந்ததை காட்டிலும் அதிக இடங்கள் சிவ சேனாவுக்கு கிடைத்துள்ளது. புனே வந்த அமித்ஷா ‘தனித் துப் போட்டியிடுவோம்’ என்று சவால் விடுத்தார். அந்த சவாலை தசரா பேரணி யில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள் ளோம். அமித்ஷாவுக்கு தைரி யம் இருந்தால் தொண்டர்களின் பலத்தில் போட்டியிட வேண்டும்.

சவால் விடுவதற்கும், அமலாக் கத்துறை மற்றும் பிற துறைகளை பின்னால் இருந்து ஏவிவிடுவ தற்கும் பெயர் தைரியம் அல்ல. பிரிட்டிஷார் ஆட்சியில் இருந் ததுபோன்று அடிமைத்தன சூழல் இன்று உருவாகியுள்ளது. இது இந்துத்துவா அல்ல. உண்மையான இந்து இதை அனு மதிக்கமாட்டான். ஒருவேளை நாம் இன்று இதை விட்டுவிட் டால், மீண்டும் அடிமைத்தனம் புகுந்துவிடும். அன்று எமெர் ஜென்சிக்கு எதிராக போராடி யதாக கூறியவர்களே, தற்போது நாட்டில் எமெர்ஜென்சி போன்ற சூழலை உருவாக்கியுள்ளனர். இதை முறியடித்து சிவசேனா கண்டிப்பாக முன்னேறும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.