அரசு வேலை, கல்வியில் இடஒதுக் கீடு கோரி மராத்தா ஆர்வலர் மனோஜ் ஜாரங்கேவின் தொடர் போராட்டங்களால் பணிந்த மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு, கடந்த வாரம் சட்டம் இயற்றி ஓபிசி பிரிவில் மராத்தா மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க உள்ளதாக அறி வித்தது. இதனால் மராத்தா போராட்டம் ஓயும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஞாயி றன்று மனோஜ் ஜாரங்கே,”மராத்தா மக் களை ஓபிசி பிரிவில் சேர்க்கும்வரை போரா டப் போகிறேன்.
ஆனால் மராத்தா இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் முனைப்பில் என்னை கொலை செய்ய பாஜக தலைவ ரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் திட்டமிட்டுள்ளார்” என கூறி னார். ஜாரங்கேவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பின் திங்களன்று மராத்தா சமுதாய மக்கள் ஜல்னா, சத்ரபதி சம்பாஜிநகர், பீட் உள் ளிட்ட மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. கடைகள் சூறையாடப்பட்டு, சாலைகளில் டயர்களை கொளுத்தி, பேருந்து ஒன்றிற்கும் தீவைக்கப்பட்டது. இத னால் ஜல்னாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டது. சத்ரபதி சம்பாஜிநகர், பீட் மாவட்டங்க ளில் இணைய சேவையும் துண்டிக்கப் பட்டது.
சிறப்பு புலனாய்வுக் குழு
இந்நிலையில், செவ்வாயன்று மராத்தா போராட்ட வன்முறை தொடர்பாக மகா ராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தொடரில் பாஜக வைச் சேர்ந்த எம்எல்ஏ ஆஷிஷ் ஷெலர், “வன்முறையைத் தூண்டும் ஆத்திரமூட்டும் வார்த்தைகளுக்கு ஜனநாயகத்தில் இட மில்லை. இதனால் மனோஜ் ஜாரங்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி னார்.
இதனை ஏற்றுக்கொண்ட மகாராஷ்டிர சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகர், “சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை தெரி வித்து மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கிய மனோஜ் ஜாரங்கேவை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து அரசு விரிவான விசா ரணை நடத்த வேண்டும்” என உத்தர விட்டுள்ளார்.
மத்திய மகாராஷ்டிராவில் பதற்றம்
சபாநாயகர் ராகுல் நர்வேகரின் உத்தர விற்கு மராத்தா மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.இந்நிலையில், மாநிலம் முழு வதும் போராட்டம் நடத்த மனோஜ் ஜாரங்கே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதனால் மராத்தா மக்கள் பெரும் பான்மையாக வாழும் மத்திய மகாராஷ்டிரா வில் தொடர்ந்து பதற்றமான சூழல் உருவாகி யுள்ளது.