states

தேசியபங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி வீட்டில் ரெய்டு

மும்பை, பிப்.17- தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் வரு மான வரித்துறை வியாழனன்று சோதனை நடத்தியது. தேசியப் பங்குச் சந்தையின் முக்கிய செயல்பாடுகள் குறித்து சாமியார் ஒருவரி டம் ஆலோசனை நடத்தி, அதன்படி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணன் மீதான புகாரின் அடிப்படையில், பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி விசாரணை நடத்தி வருகிறது. சித்ரா ராமகிருஷ்ணன் மூன்றாவது நபர்களிடம் ரகசியத்தை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை விதிகளை மீறி தேசியப் பங்குச் சந்தையில், தலைமை செயல்பாட்டு அதி காரியாக நியமித்ததாகவும், இமயமலை யில் இருப்பதாகக் கூறப்படும் சாமியார் ஒரு வரிடம் பங்குச் சந்தை தொடர்பாக ஆலோ சித்து, அவர் சொல்லும் அறிவுரைப்படி, முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் சித்ரா  ராமகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான சென்னை வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.