மும்பை, நவ.16- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தற்போது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள் ளார். தமிழ்நாட்டில் துவங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா என 6 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் பயணத்தை முடித்துள்ள ராகுல் காந்தி, மகாராஷ்டிரா வின் வாஷிம் மாவட்டம், ஹிங்கோலி நகரில் நடைபெற்ற பிர்சா முண்டா பிறந்தநாள் கூட்டத் தில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: பிர்சா முண்டா (பழங்குடியினத்தைச் சேர்ந் தவர்) ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி னார். அவருக்கு 24 வயதாக இருந்தபோது ஆங்கிலேயர்கள் அவரைக் கொன்றனர். பிர்சா முண்டா தனது 24 ஆண்டுகளில் அனைத்தையும் செய்தார். அந்த பிர்சா முண்டாவின் சித்தாந்தம், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் இன்று தாக்கு தலுக்கு உள்ளாகி வருகிறது.
பழங்குடியினர் தான் நாட்டின் உண்மையான உரிமையா ளர்கள். ஆனால், பழங்குடியின மக்களின் பெயரை ‘ஆதிவாசி’ என்பதில் இருந்து வன வாசி என்று மாற்றியதன் பின்னணியில் அவர் கள் (பாஜக) ஆழமான உத்திகளை கொண் டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் பல உரிமை களை பறித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் டாக்டர் அம்பேத்க ரால் எழுதப்பட்டது. அப்போது எங்களுக்கு அர சியலமைப்பு வேண்டாம் என்று பாஜக-வின் மூதாதையர்கள் கூறினர். இப்போது அரசியல மைப்பை தொடர்ந்து தவறாக பயன்படுத்து கின்றனர். பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் உரிமைகளைப் பெறுவதை பாஜக விரும்பவில்லை. சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தன்னை மன்னித்து சிறையில் இருந்து விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தார். சாவர்க்கர் ஆங்கிலேயர்களி டம் இருந்து ஓய்வூதியம் பெற்றார், காங்கிர ஸூக்கு எதிராக வேலை செய்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சாவர்க்கர் ஆங்கி லேயர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் படையில் சேர்ந்தார். சாவர்க்கருக்கும் பிர்சா முண்டாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பிர்சா முண்டா தனது 24 வயதில் ஆங்கிலேயருக்கு எதி ராக போராடினார் என்பதுதான். இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.