மக்களவை தேர்தலுக்கான தேதி இந்த வாரம் அறிவிக் கப்படும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், “இந்தியா” கூட் டணி 12க்கும் மேற்பட்ட மாநிலங்க ளில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. ஆனால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி முழுமை யாக 5 மாநிலங்களில் கூட தொகுதி பங்கீட்டை இன்னும் நிறைவு செய்ய வில்லை.
பீகாரைப் போல மகாராஷ்டிரா விலும் முட்டல் மோதல் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அரங்கே றியுள்ளன.
48 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) ஆகிய கட்சி கள் இடம்பெற்றுள்ளன. மகா ராஷ்டிராவில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை புதனன்று நிறைவு பெற்ற நிலையில், பாஜக 31 தொகுதிகளி லும், சிவசேனா (ஷிண்டே) 13 தொகு திகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சிக்கு 4 தொகுதிகளும், கூட்டணியில் உள்ள பிராந்திய கட்சிக்கு ஒரு தொகுதியும் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.
அஜித் பவார் அணி கடும் எதிர்ப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து 41 எம்எல்ஏக் களுடன் உங்களுக்கு (பாஜக) ஆத ரவு அளித்துள்ள சூழலில் வெறும் 4 தொகுதிகள் கொடுப்பது நல்ல தல்ல என தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி போர்க்கொடி தூக்கியுள்ளது. சிலர் பாஜக கூட்ட ணியை விட்டு வெளியேறலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ள னர். அவ்வாறு வெளியேறினால் ரூ. 70,000 கோடி கூட்டுறவு ஊழல் வழக்கை வைத்து மோடி அரசு நெருக்கடி அளிக்கும் என்பதால், இதுகுறித்து அஜித் பவார் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.