மனோஜ் ஜாரங்கேவின் தொடர் போராட்டத்தால் பணிந்த மகா ராஷ்டிரா அரசு ஜனவரி மாத இறுதியில் மராத்தா இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநில உணவுத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸின் (அஜித்) ஒபிசி தலைவருமான சாகன் புஜ் பால்,”மராத்தா விவகாரம் தொடர் பாக நான் கடந்த நவம்பர் மாதமே தனது அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்துவிட்டேன். ஒபிசி பிரி வுக்குள் தற்போதுள்ள ஒதுக்கீட்டைப் பகிர்வது சரியானது அல்ல” என கூறி னார்.
இதனால் மராத்தா இடஒதுக்கீடு மூலம் மகாராஷ்டிரா பாஜக கூட்ட ணிக்குள் புகைச்சல் உருவாகியுள் ளது என தகவல் வெளியாகிய நிலை யில், மராத்தா மக்களை ஏமாற்றவே சாகன் புஜ்பால் மூலம் அரசியல் ராஜி னாமா நாடகம் அரங்கேற்றப்பட்டுள் ளது என சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பி யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி யுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந் திப்பில் அவர் கூறுகையில், “நவம்பர் மாதம் 16-ஆம் தேதி ராஜினாமா செய்த தாக சாகன் புஜ்பால் கூறுகிறார். பிறகு எப்படி தற்போது வரை அமைச்சரவை கூட்டத்தில் அவர் கலந்துகொள்கி றார்? மராத்தா இடஒதுக்கீடு விவகா ரத்தில் பாஜக தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னா விஸ் மற்றும் சாகன் புஜ்பால் இரு வரும் கைகோர்த்து நாடகமாடு கிறார்கள். அதாவது நீங்கள் (புஜ் பால்) ராஜினாமா செய்யுங்கள், நாங் கள் (பட்னாவிஸ்) ஏற்க மாட்டோம் என கூறி நாடகத்தை அரங்கேற்றி யுள்ளார்கள்” என அவர் கூறியுள் ளார்.