மும்பை, ஜூலை 5- மகாராஷ்டிராவின் எதிர்க் கட்சித் தலைவரும், தேசிய வாத காங்கிரசின் மூத்த தலை வருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக - சிவசேனா (ஷிண்டே) கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றார். அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் அமைச்சர் பதவியை பெற் றுள்ள நிலையில், பாஜக கூட்ட ணியில் அஜித் பவார் வரு கைக்கு ஷிண்டே பிரிவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா (ஷிண்டே) பிரி வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஷிர்சத் பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்ததற்கு வெளிப் படையாகவே எதிர்ப்பு தெரி வித்துள்ளார். இதுகுறித்து சஞ் சய் ஷிர்சத் செய்தியாளர்கள் சந்திப்பில், “பாஜக கூட்டணி யில் அஜித் பவார் இணைந்த தில் எங்கள் (ஷிண்டே பிரிவு சிவசேனா) தலைவர்கள் அனை வரும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது உண்மையல்ல. இந்த விவகாரம் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி யுள்ளது. நாங்கள் இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் வர் பட்னாவிஸ் ஆகியோரி டம் வருத்தத்தை தெரிவித் துள்ளோம். அவர்களின் நடவ டிக்கைக்கு காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். ஷிண்டே பிரிவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மகா ராஷ்டிராவில் அடுத்த கட்ட அர சியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.