states

img

துணை முதல்வரின் மனைவிக்கு சூதாட்டக்காரர்களை அறிமுகப்படுத்திய பேஷன் டிசைனர்!

மும்பை, மார்ச் 17 - மகாராஷ்டிர துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவி ஸின் மனைவிக்கு சூதாட்டக்காரர்களை அறிமுகப்படுத்தி ரூ. 1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பேஷன் டிசை னரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர பாஜக துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா. இவருக்கு கடந்த 2021 நவம்பரில் அனிஷ்கா என்ற பேஷன் டிசைனர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர், தான் வடிவமைத்த ஆடை கள், நகைகள், காலணிகளை பொது நிகழ்ச்சிகளில் அணிந்தால் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என அம்ருதா பட்னாவிசிடம் கூறியுள்ளார். மேலும் அவர் தனக்கு தாய் கிடையாது, குடும்பத்தை தனியாக கவனித்து வருவ தாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் அம்ருதா பட்னா விசுக்கு அவர் மேல் அனுதாபம் ஏற்பட்டு, அனிஷ்காவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நாளடைவில், அனிஷ்கா தனக்கு சில சூதாட்டக்காரர்க ளை தெரியும் என அம்ருதா பட்னாவிசிடம் கூறி, அவர்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என ஆசை வார்த்தை கூறி யுள்ளார். மேலும் அம்ருதா பட்னாவிசிடம் சூதாட்டக்கா ரரான தனது தந்தையை வழக்கு ஒன்றில் இருந்து காப் பாற்ற வேண்டும் எனவும், இதற்காக ரூ. 1 கோடி லஞ்சம் தருவதற்கும் தயார் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அம்ருதா மறுத்த நிலையில், அனிஷ்கா வேறு  செல்போனில் இருந்து அம்ருதா பட்னாவிசை தொடர்பு கொண்டு மறைமுகமாக மிரட்டும் வகையில் வீடியோ, ஆடியோ பதிவுகளை அனுப்பியுள்ளார். அனிஷ்காவின் தந்தையும் அம்ருதாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து அம்ருதா பட்னாவிஸ் மும்பை மல பார்ஹில் போலீசில் புகார் அளிக்கவே, அனிஷ்கா மற்றும் அவரது தந்தை மீது, சதித்திட்டம், ஊழல் தடுப்பு, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீ சார், தற்போது இருவரையும் கைது செய்துள்ளனர்.