புதுதில்லி, ஆக. 2 - மணிப்பூர் விவகாரத்தில் தலையிடு மாறு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் புதனன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். மணிப்பூர் விவகாரத்தை நாடாளு மன்றத்தில் விவாதிக்க மறுப்பதுடன், அதுதொடர்பாக பதிலளிக்கவும் முடி யாது என்று பிரதமர் நரேந்திர மோடி பிடிவாதமாக இருக்கும் நிலையில், “உங்களின் தலையீட்டின் மூலமாகவே மணிப்பூர் மாநிலம் எதிர்கொள்ளும் அசாதாரண சூழ்நிலையை சரிசெய்ய முடியும்; இயல்புநிலையையும் மீட்டெ டுக்க முடியும்” என்று இந்தியா கூட் டணி எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர். மணிப்பூர் சென்று திரும்பிய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளதாக ஏற்கெ னவே அறிவித்திருந்தன. இதற்காக குடி யரசுத் தலைவரிடம் நேரமும் கேட்டறிந் தனர். அவர் அனுமதி வழங்கிய நிலை யில், புதன்கிழமை காலை 11.30 மணிக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குழு, குடியரசுத் தலைவரை அவரது மாளிகையில் நேரில் சந்தித்தனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்கள் உட்பட, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 31 எம்.பி.க்கள், இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கிக் கூறிய அவர்கள், இந்த விவகாரத்தில் குடியர சுத் தலைவர் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தியா கூட்டணி தலைவர்களின் கோரிக்கைகள் குறித்து உறுதிமொழி எதையும், குடியரசுத் தலைவர் வழங்கா விட்டாலும், அனைத்துக் கருத்துக் களையும் பொறுமையாக கேட்டுக் கொண்டதாகவும், பரிசீலிப்பதாக கூறியதாகவும் தெரிகிறது. இதனிடையே, குடியரசுத் தலை வரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “எதிர்க்கட்சிகளின் சார்பில் மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்கள் உட்பட எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 31 எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வைச் சந்தித்தோம். அவரிடம் கோரி க்கை மனு ஒன்றினை அளித்தோம். அப்போது, மணிப்பூர் நிலவரம் குறித்து, குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, மறுவாழ்வு மற்றும் பிற நில வரங்கள் குறித்து நாங்கள் விளக்கி னோம். இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மாநிலத்தில் அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்க ளுடைய மிக முக்கியமான கோரிக்கை. அதையும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம். அதேபோல, ஹரியானாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறைகள் தொடர்பாகவும் குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.” என்று குறிப்பிட்டார்.