states

img

மணிப்பூரில் பந்த்: பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பதற்றம்

பாஜகவின் இழி அரசியலால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த  5 மாதங்களாக பற்றி எரிந்து வரும் நிலை யில், கலவரத்தால் உயிரிழந்தோர் எண் ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது. 1,108 பேர் காயமடைந்துள்ள நிலை யில், பல ஆயிரம் மக்கள் சொந்த மாநி லத்திலேயே அகதிகளாக வாழ்ந்தும், வேறு பகுதிக்கு வெளியேறியும் வரு கின்றனர்.  ஆனால் மாநில பாஜக அரசு மாநி லத்தில் அமைதி நிலவுவதாக கூறினா லும், ஒவ்வொரு நாளும் ஆங்காங்கே  வன்முறை சம்பவங்கள் அரங்கேறி தான் வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மூலம் 6  பேர் உயிரிழந்த நிலையில், பலர் படு காயத்துடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், மணிப்பூர் போலீசார்  அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உரு வத்தை மறைக்கும் சீருடைகள் வைத்தி ருந்ததாகக் கூறி 5 இளைஞர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட  இளைஞர்கள் நீதித்துறை மாஜிஸ்தி ரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலை யில், “மீரா பைபி (Meira Paibi)” என்கிற  மெய்டெய் பெண்கள் அமைப்பு கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடு விக்கக்கோரி திங்களன்று இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஹுரை மற்றும் கோங்பா, மேற்கு மாவட்டத்தின் காக்வா, பிஷ்னுபூர் மாவட்டத்தின் நம் போல், தவுபால் மாவட்டத்தின் சில பகுதிகளின் முக்கிய சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்தினர்.  தொடர்ந்து செவ்வாயன்று முதல் 48 மணிநேர பந்த் அறிவித்தனர். பந்த் காரணமாக இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. சந்தை கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன,  சில வாகனங்களே சாலைகளில் ஓடின.  மணிப்பூர் மேல்நிலைக் கல்வி வாரியம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடத்த  திட்டமிட்டிருந்த 10-ஆம் வகுப்புக்கான அனைத்து துணைத்தேர்வுகளும் பந்த் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெய்டெய் ஆதரவு பந்த்தால் மணிப்பூர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.