states

img

மணிப்பூர் கலவரம்: ஒன்றிய இணை அமைச்சர் ரஞ்சன் சிங் வீட்டிற்கு தீ வைப்பு

மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலில் நடந்த கலவரத்தில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டெய் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழங்குடியினர் மாணவர் அமைப்பு கடந்த மே 3-ஆம் பேரணி நடத்திய போது, கலவரம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  

இந்த நிலையில், இம்பாலில் நேற்றி இரவு நடந்த கலவரத்தில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது ஒன்றிய அமைச்சர் வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அம்மாநில தொழில்துறை அமைச்சர் நெம்சா கிப்ஜெனின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.