மெய்டெய் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பது குறித்த உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் தங்கள் பிரிவை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மெட்டெய் சமூகத்தினர் நீண்ட காலமாகாக கோரிக்கை முன்வைத்து வந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மெய்டெய் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டெய் சமூகத்தினர் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில், மெய்டெய் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பது குறித்து உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.