வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூரில் 1970-ஆம் ஆண்டில் மதுவிலக்குக் கான போராட்டங்கள் தொடங்கின. 21 வரு டங்களாக நீடித்த போராட்டத்திற்கு பிறகு 1991இல் மணிப்பூர் மக்கள் இயக்க கட்சி சார்பில் மாநில முதல்வராக இருந்த ராஜ்குமார் ரன்பீர் சிங் மாநி லத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி னார். ஆனால் தலித், பழங்குடியின பிரி வினரின் பாரம்பரிய மது தயாரிப்புக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட் டது.
இந்நிலையில், சட்டவிரோத கள் ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்து வதாக கூறி 32 ஆண்டுகளாக நிலுவை யில் இருந்த மணிப்பூர் மாநிலத்தின் மதுவிலக்கு கொள்கையை ஆளும் மாநில பாஜக அரசு கைவிடுவதாக அறிவித்து, மதுபான தயாரிப்பு, விற்ப னையை ஒழுங்குபடுத்த மணிப்பூர் மதுபானங்களுக்கான அரசு நிறு வனம் (MSBCL) என்ற பெயரில் அரசு நிறுவனம் ஒன்றையும் உருவாக்கி யுள்ளது. மணிப்பூர் அரசின் இந்த அறிவிப்பையடுத்து மாநிலம் முழு வதும் கடும் எதிர்ப்பலை கிளம்பி யுள்ளது.
ஓராண்டாக மறைமுக திட்டத்தில் இருந்த பைரன் சிங்
மணிப்பூர் மாநில முதல்வ ராக பைரன் சிங் 2022இல் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பதவி யில் அமர்ந்ததும் மதுவிலக்கு கொள்கையை தளர்த்தி 50% அள வில் மதுபான கடைகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்தி ருந்தது. ஆனால் வன்முறையால் இந்த திட்டம் சரியாக அமல்படுத்த முடியாத சூழலில், தற்பொழுது 32 ஆண்டுகால மதுவிலக்கு கொள்கையை கைவிட்டு ஓராண் டாக திட்டமிட்டு இருந்த மறைமுக திட்டத்தை அமல்படுத்தியுள்ளார் பாஜக முதல்வர் பைரன் சிங்.
சமூகவலைத்தளங்களில் வறுபடும் பாஜக
தமிழ்நாடு அரசை விமர்சிக்க குற்றச்சாட்டுகள் இல்லாததால் பாஜக டாஸ்மாக் மதுபான கடைகளை பற்றி எதையாவது கூறி அரசியல் ஆதாயம் தேடுவது வழக்கம். இத்தகைய சூழலில் பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் 32 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மதுவிலக்கு கொள்கையை கைவிட்டது ஏன்? என பல்வேறு விமர்சனங்களுடன் பாஜக சமூகவலைத்தளங்களில் வறுபட்டு வருகிறது.