புதுதில்லி, ஜூலை 21- மணிப்பூர் முதலமைச்சர் பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் மிகவும் கொடூரமான முறையில் நிர்வாணப்படு த்தப்பட்டு, சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு, அவர்களில் ஒரு வரை கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி யிருப்பதும், அந்தப் பெண்ணைக் காப்பாற்றச் சென்ற அந்தக் குடும்பத்தி னர் இருவரைக் கொலை செய்திருப்ப தும், நாடு முழுதும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாதுகாக்கும் பாஜக அரசு
இந்தக் கொலைபாதகச் செயலில் ஈடுபட்டக் கயவர்களுக்கு எதிராகப் பாதிக் கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சம்ப வம் நடந்த இரு வாரங்களுக்குள்ளாகவே காவல் துறையினர் முன் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருந்தபோதும், காவல் துறையினர் அந்தக் கயவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திலிருந்து, பாஜக அரசாங்கம் நேரடி யாகவே அந்தக் கயவர்களுக்குப் பாது காப்பு அளித்துவருவதும் தெரிய வந்திருக்கிறது. மணிப்பூர் மாநிலம் கடந்த இரண்ட ரை மாதங்களாக எரிந்துகொண்டிருந்த போதிலும், மாநிலத்தின் முதலமைச்ச ரையும், மாநில அரசாங்கத்தையும் பாஜக-வின் உயர் தலைமையும், ஒன்றிய அரசாங்கமும் பாதுகாத்துக் கொண்டிருக் கின்றன. பல மாதங்கள் கேளாக் காதின ராக இருந்து விட்டு இப்போது வெளியிடப் பட்டுள்ள பிரதமரின் அறிக்கை, சம்பவத் தையும், மணிப்பூரில் நடைபெற்ற வன் முறை வெறியாட்டங்களையும், முத லமைச்சரின் ஒருதலைப்பட்சமான பங்கி னையும் சிறுமைப்படுத்தி இருக்கின்றன. உண்மையில் இந்தக் கொலை பாதகச் செயல்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது இரட்டை என்ஜின் அரசாங்கமேயாகும். பாஜக-வினால் நடத்தப்பட்டுவரும் ‘நல்லாட்சியின் இலட்சணம்’ இதுவேயாகும். மணிப்பூர் முதலமைச்சர் உடனடி யாக ராஜினாமா செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கோரு கிறது. இந்தக் கோரிக்கையை வலி யுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண் களுக்கும், மணிப்பூர் மக்களுக்கும் ஒருமைப்பாடு தெரிவித்தும் நாடு முழு தும் உள்ள கட்சிக் கிளைகள் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)