states

img

மணிப்பூர் ஆளுநருடன் ‘இந்தியா’ எம்.பி.க்கள் சந்திப்பு

இரு தரப்பிலும் சுமூகமாக அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

இம்பால்,ஜூலை 30- மணிப்பூர் சென்ற  இந்தியா கூட்டணி  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஞாயிறன்று ஆளுநரை சந்தித்தனர்.  இருதரப்பிலும் சுமூகமான வாழ்க்கை  அமையவும், மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குச் செல்லவும், அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவும் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை  மனு அளித்தனர். கடந்த 80 நாட்களுக்கு மேலாக நிகழ்ந்துகொண்டிருக்கும் கலவரம்-வன்முறையால் மணிப்பூர் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு உதவாமல் அவர் களை சந்திக்கக்கூட மனமில்லாமல் ஒன்றிய-மாநில அரசுகள் வேடிக்கைப் பார்க்கின்றன. 2 பெண்களை நிர்வாண மாக இழுத்துச்சென்று கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்தது ஒரு கும்பல். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்றத்திற்கு வர மறுத்தும்  மணிப்பூர் குறித்து விளக்கம் அளிக்காமல் பிரதமர் ஓடி ஒளியும் நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்குச் சென்று,பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு  2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில் மணிப்பூர் சென்ற தாக எதிர்க்கட்சி கூட்டணியின் எம்.பி.க்கள் குழு தெரிவித்தது. வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி தேவையானவற்றை கேட்டறிந்தனர். ஞாயிறன்று ஆளுநர் அனுசுயா உய்கே-வை சந்தித்து அவரி டம் மனு அளித்தனர். மணிப்பூருக்கு அடிக்கடி வரும் ஒரே  குழு எங்களது குழுதான். பிரதமர் அனைத்துக்கட்சி குழுவையும் வழி நடத்த விரும்பினால், அதில் நாங்கள்  ஒருபகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி யடைவோம். அமைதியை நிலைநாட்ட நாங்கள் விரும்புகிறோம், அதற்காகவே நாங்கள் மணிப்பூர் சென்றோம். சுமார் 85 நாட்களுக்கும் மேலாக அங்கு பதற்ற மான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, பிரதமர் மௌனம் சாதித்து வருகிறார் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

திருமாவளவன் பேட்டி

இந்த குழுவில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்க ளவை உறுப்பினருமான தொல்.திரு மாவளவன் தில்லியில் ஞாயிற்றுக்கிழ மையன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில், “தங்கள் குடியிருப்புகளுக்குச் சென்று மீண்டும் தங்குவது பாதுகாப்பு இல்லை என்று குக்கி மற்றும் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வருத்தத்தை பகிர்ந்துகொண்டனர். மியான்மரில் இருந்து ஏராளமான வர்கள் மணிப்பூருக்கு இடம்பெயர்ந்து அவர்களால்தான் இங்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. என்ஆர்சியை தீவிர மாக நடைமுறைப்படுத்தவேண்டும். அங்கிருந்து இங்கு புலம்பெயர்ந்த வர்களை உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்  கூறினர்.

அதேபோல், குக்கி சமூகத்தைச் சேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பெண் உறுப்பினர்கள் தனியே சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர் ஒருவரின் குடும்பம் கடுமை யாக பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம்.  அதுதான் மிகப்பெரிய வைரல் வீடி யோவாக வெளியே வந்தது. அந்த  குடும்பத்தைச் சேர்ந்த வீரரின் மனை வியை சந்தித்தோம். பாதிக்கப்பட்ட அவர்களுடைய மகளை சந்திக்க இயலவில்லை. ஆனால், குழுவில் இருந்த மகளிர் எம்.பி.க்கள் அவர்களை தனியே சந்தித்தனர். ஞாயிறன்று காலை அம்மாநில ஆளுநரை சந்தித்தோம். நீண்ட நேரம்  எங்களுடைய கருத்துகளை கேட்டுக் கொண்டார். இருதரப்பிலும் சுமூகமான வாழ்க்கை அமைய வேண்டும். அதற்கேற்ப ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள், குறிப்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவி லியர் படிப்புகள் படிக்கும் மாண வர்கள், பல் மருத்துவம் படிக்கின்ற மாண வர்கள், இம்பாலில் மீண்டும் சேர்ந்து எங்களால் படிக்க முடியாது. தங்களது கல்வியை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துக் கூறினோம். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.

அங்கு அமைதி திரும்பும் என்று நம்புகிறோம். அங்கே அமைதி திரும்ப வேண்டும். அந்த மக்களின் குரலை  இங்கே எதிரொலிப்பதற்கு, நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் அங்கு சென்று திரும்பியவர்களின் அனு பவத்தை எடுத்துரைக்க அவையில் விவாதிக்க வாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறோம்.  60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஒரு இடத்தில் தங்கியிருக்கின்றனர். அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. அவர் களுக்கு நல்ல உணவு, மின் வசதி, குடிநீர் வசதி, உடை உள்ளிட்டவற்றை ஒன்றிய,  மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். கல்லூரி மாணவர்கள், தொழிற்கல்வி  படிக்கின்ற மாணவர்கள் உள்ளிட்ட வர்கள் அவர்களுடைய கல்வியை தொடருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானது. ஜனநாயக சக்திகளை ஒருங்கிணை த்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வை உருவாக்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இரண்டு நிலையிலும் பாஜக அரசு பதவி வகிக்கும் நிலையில், இந்த பேச்சு வார்த்தையை நடத்துவது மிக எளிதான ஒன்று. ஆனால், இரண்டு அரசுகளும் அதில் பொறுப்பற்ற முறையில் செயல் படுகிறது என்பதுதான் அதிர்ச்சியளிக் கிறது. இரு சமூகத்து மக்களும் ஒன்றிய, மாநில அரசுகளின் மீது இருக் கும் வருத்தத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள், குறை கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

கனிமொழி எம்.பி.,

கனிமொழி எம்.பி., செய்தியாளர்களி டம் கூறுகையில்,  மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய். அனைத்து சமூக மக்களுக்குமே அரசு மீது நம்பிக்கை இல்லை. பாதுகாப்பு கோரி மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகிறார்கள்.  பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் எம்பிக்கள் மட்டும் சந்தித்துப் பேசினோம். காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை அழைத்துக் கொண்டுபோய் வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டது என புகார் தெரிவித்தனர் என்று கூறினார்.