states

img

மணிப்பூரில் பழங்குடியினரை வெளியேற்ற பாஜக தீவிரம்

பாஜகவின் வகுப்புவாத அரசிய லால் வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூர் கடந்த 10 மாதங்களாக பற்றி எரிந்து வரு கிறது. வன்முறைக்கு பலியானோர் எண்  ணிக்கை 200-ஐ கடந்துள்ள நிலையில், பல ஆயிரம் மக்கள் சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்ற னர். ஆனால் வன்முறையை கட்டுப் படுத்த வேண்டிய பொறுப்பை மேற்  கொள்ள வேண்டிய மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசுகள் கூடுதல் வன்  முறையை உருவாக்கும் முனைப்பி லேயே செயலாற்றி வருகின்றன. இந் நிலையில், கடத்தல் விவகாரத்தை கார ணம் காட்டி மணிப்பூரில் வாழும் பழங்  குடியினரை வெளியேற்ற ஆளும் பாஜக  அரசு அடுத்தகட்ட சதி நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

திங்களன்று மணிப்பூர் பாஜக முதல்  வர் பைரேன் சிங் கூறுகையில், “மணிப்பூ ரில் நிகழ்ந்து வரும் வன்முறைக்கு கார ணம் போதைப்பொருள் மாபியா மற்றும்  சட்டவிரோதமாக குடியேறியவர்கள், குறிப்பாக மியான்மரில் இருந்து வந்த அகதி களே ஆவர். இதனால் 1961-ஆம் ஆண்டுக்  குப் பிறகு மாநிலத்தில் வந்து தங்கி யிருக்கும் நபர்கள், அவர்களின் சாதி  அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தா மல் அடையாளம் காணப்பட்டு நாடு  கடத்தப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

மியான்மர் அகதிகள் என்று பைரேன்  சிங் குறிப்பிடுவது குக்கி இன பழங்குடி  மக்களையே. குக்கி இன பழங்குடி மக்கள்  மியான்மரில் வாழும் பழங்குடி மக்களின்  தொப்புள் கொடி உறவுகள் போன்றவர் கள் என்ற நிலையில், நேரடியாக குக்கி இன மக்களை வெளியேற்றுவோம் என சொல்வதற்குப் பதிலாக மியான்மர் அகதி கள் என்று முதல்வர் பைரேன் சிங் மறை முகமாகக் கூறியுள்ளார். 

முதல்வர் பைரேன் சிங்கின் கருத்தை  தொடர்ந்து மணிப்பூரில் அடுத்தகட்ட வன்  முறை பதற்றம் உருவாகியுள்ளது.