states

img

மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 8 பேர் உயிரிழப்பு!

மணிப்பூரில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி மீண்டும் வன்முறை வெடித்த நிலையில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் வன்முறையில், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி மீண்டும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளுர் பாடலாசிரியர் எல்.எஸ்.மங்போய்யும் இந்த வன்முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.