மும்பை, ஆக. 30 -
‘இந்தியா’ (I-N-D-I-A) கூட்டணியின் மூன்றாவது கூட்டம், மும்பையில் வியாழனன்று துவங்குகிறது. இதில், 28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலை வர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசி யவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்ட்ரிய ஜனதாதளம் மூத்த தலைவர் லாலு பிரசாத், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
மும்பை கூட்டம் குறித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோர் புதனன்று செய்தியாளர் களைச் சந்தித்தனர்.
அப்போது, “எதிர்க்கட்சிகளின் இந்த மூன்றாவது கூட்டத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படலாம்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். “கூட்டத்தின் முடிவில், ‘இந்தியா’ கூட்டணிக்கான இலச்சினை வெளியிடப்படும்” என்றும் அவர் கூறினார். ‘
இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு உத்தவ் தாக்கரே பதிலளித்தார். “இந்தியா கூட்டணியில் தகுதிவாய்ந்த பிரதமர் வேட்பாளர்கள் நிறையவே இருக்கிறார்கள்; ஆனால், பாஜகவில் பிரதமர் மோடியைத் தவிர யாரை யாவது கூற முடியுமா?” என்று அவர் எதிர்க்கேள்வி எழுப்பினார்.
“இந்த நாட்டின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான நோக்கத்தை அடிப்படையாக கொண்டே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது” என்று சரத் பவார் கூறினார்.
“’இந்தியா’ கூட்டணி கட்சிகள், 2019 தேர்தலில் 23 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தன. இது பாஜக பெற்ற 22 கோடி வாக்குகளைக் காட்டிலும் அதிகமாகும். அப்போது எதிர்க்கட்சிகள் பிளவுபட்டிருந்ததே பாஜக-வின் வெற்றிக்குக் காரணம்; இம்முறை அது நடக்காது” என்று அசோக் சவான் குறிப்பிட்டார். மேலும், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் எண் ணிக்கை 26-இல் இருந்து 28 ஆக அதி கரித்துள்ளதாகவும், இது பெருகி வரும் ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூட்டணியில் இணைவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சரத் பவார், “கடந்த காலங்களில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால், அவ ரது நிலைப்பாடு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; இதில் மாயாவதிதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார். எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டதைக் குறிப்பிட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், “‘இந்தியா’ கூட்டணியின் கூட்டு முயற்சி களே இதற்குக் காரணம் என்றார்.
இந்தியா கூட்டணி உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையின் நேரடி விளைவுதான் சிலிண்டர் விலை குறைப்பு” என்றார்.