states

img

மும்பை: கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு!

மும்பையின் செம்பூரில் உள்ள என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையின் செம்பூர் பகுதியில் என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர தடி விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
மாணவிகளின் போராட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்த வர அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் வகுப்பறைக்குள் ஹிஜாப்புக்கு தடை என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

;