பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிராவில் சமீபகாலமாக போதைப் பொருட்களின் பயன் பாடு சர்வசாதார ணமாகஅதிகரித்து வருகிறது.
இந்நிலையில், போதைப் பொருட் கள் கடத்தல் மற் றும் விற்பனை தொடர்பாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராய்காட் மாவட்டம் கோபோலி பகுதி யில் உள்ள அன்சால் கெமிக்கல் மருந்து நிறுவனத்தில் போலீசார் சோதனை மேற் கொண்டனர். இந்த சோதனையில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீ சார் நடத்திய விசாரணையின் அடிப்படை யில் மேலும் சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.218 கோடி மதிப்பி லான 174 கிலோ போதைப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. இதன்மூலம் ராய் காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.325 கோடி என கொங்கன் சரக ஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.