மும்பை – புனே விரைவு சாலையில் ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை – புனே விரைவு சாலையில் கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் மெத்தனால் என்ற ரசாயனத்தை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது திடீரென உராய்வு காரணமாக டேங்கர் லாரி தீ பிடித்து எறிந்தது. இதில், 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.