states

img

தபோல்கர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில், சச்சின் அந்துரே, சரத் கலஸ்கர் ஆகிய இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி புனேவில் சங்பரிவார் கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம், இவ்வழக்கில் தீவிர இந்துத்துவா வலதுசாரி அமைப்பான “சனாதன் சன்ஸ்தா” அமைப்பின் நிர்வாகியான மருத்துவர் வீரேந்திரசிங் தவாடே, சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ கர்,  சஞ்சீவ் புனாலேகர், விக்ரம் பாவே  ஆகிய 5 பேரை சிபிஐ  கைது செய்தது.

இந்த நிலையில், தபோல்கர் கொலை வழக்கில், சச்சின் அந்துரே, சரத் கலஸ்கர் ஆகிய இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரேந்திர சிங் தவாடே, சஞ்சீவ் புனா லேகர், விக்ரம் பாவே ஆகியோர் மீதான  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.