வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பிற்கும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மகாராஷ்டிரா அரசுக்கு பல மாதங்களாக, பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆளும் பாஜக கூட்டணி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திய நிலையில், செவ்வாயன்று மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலக கட்டிடமான ‘மந்தராலயா’ கட்டிடத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயலக கட்டிட மாடியின் மீது ஏறி தலைமை செயலக கட்டிடத்திற்குள் விவசாயிகள் குதித்தனர். ஆனால் உள்கட்டிடத்திற்குள் வலை அமைத்து, போலீசார் கைது செய்தனர்.