states

img

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீ விபத்தில் பலி

மகாராஷ்டிராவில் வீடு மற்றும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 3 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பிரம்மங்காவ்ன் கிராமத்தில் வீட்டோடு இணைந்து கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
இந்த தீ விபத்து குறித்து காவல்துறையின் தரப்பில் கூறியதாவது :  
இந்த தீ விபத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. மின்கசிவு ஏற்பட்டு தீ மளமளவென வீடு மற்றும் கடையில் பரவியுள்ளது. இந்த விபத்தில் கடை உரிமையாளர் மனைவி துவாராகா அனந்தா மோல் (46) , தாய் கங்குபாய் மோல் (78), குழந்தைகள் பல்லவி மோல் (15), மற்றும் கிருஷ்ணா மோல் (10) உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,

;