பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை விமர்சித்ததாகக் கூறி புனேவில் பத்திரிகையாளர் நிகில் வாக்லேவின் கார் கண்ணாடியை உடைத்து பாஜகவினர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் மிரட்டலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாவது வழக்கமாக ஒன்றாக மாறுயுள்ளது. இந்த சூழலில், அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாகப் பிரதமர் மோடி அறிவித்ததைப் பத்திரிகையாளர் நிகில் வாக்லே கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதை அடுத்து நிகில் வாக்லே மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று இரவு புனேவில் பத்திரிகையாளர் நிகில் வாக்லேவின் காரை வழிமறித்து கார் மீது நீல நிற மையை ஊற்றி, கார் கண்ணாடியை உடைத்தும் பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு மும்பை பத்திரிகையளர்கள் மன்றம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.