வெடிமருந்து தொழிற்சாலை யில் பலியான 9 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சம்பவ இடத்தை பார்வை யிட்ட பிறகு அம்மாநில துணை முதல்வரும், பாஜக தலைவரு மான தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஆனால் சம்பவ இடத்திற்கு பட்னாவிஸுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (சிவ சேனா) வரவில்லை. அதன் பிறகு வெடிமருந்து தொழிற் சாலை விபத்து தொடர்பாக உரிய விசாரணை மற்றும் நிவா ரண நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு நாக்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ள தாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனியாக அறிக்கை வெளியிட் டார். இதனால் மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மீண்டும் தக வல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதமே மகாராஷ் டிரா பாஜக கூட்டணிக்குள் குழப் பம் ஏற்பட்டுள்ளதாகவும், வர விருக்கும் 2024 சட்டமன்ற தேர் தலில் முதல்வர் வேட்பாளராக பாஜக தலைவரும், தற்போ தைய துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் அறி விக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த தகவல் வெளியானதும், முதல்வர் ஏக் நாத் ஷிண்டே உடல்நலக் குறைவு என மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் முக்கிய தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே ஆத ரவு எம்எல்ஏக்கள் மூலம் காங்கி ரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த் தது பாஜக. தற்பொழுது பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசிய வாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வ ராக தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோரும் உள் ளனர். அறிக்கை, நிவாரண அறி விப்பு என அனைத்திலும் முதல் வராக ஏக்நாத் ஷிண்டே தலை காட்டி வருகிறார். இந்நிலையில், மாநில சட்டமன்ற மற்றும் மக்க ளவை தேர்தல் நெருங்கி வருவ தால் சமீபகாலமாக துணை முதல்வரான தேவேந்திர பட்னா விஸ் மட்டுமே அனைத்து விவகா ரத்திலும் முகம் காட்டி வருகிறார். டம்மியாகும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே ஓரங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.