states

img

மும்பை: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி 4 பேர் பலி 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிர மாநிலம் மும்பை புனே தேசிய நெடுஞ்சாலையில் கோபோலி என்ற இடத்தில் இன்று காலை 6.30 மணியளவில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பல வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.