மகாராஷ்டிர மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பையில் கஞ்ஜுமார்க் பகுதியில் உள்ள என்.ஜி. ராயல் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகலில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் 10 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி வருகிறது. குடியிருப்பில் உள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. 10 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்