மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பணியில் இருந்த காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு திறப்பு விழாவில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார், பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்லே, மருத்துவ கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுனில் தட்கரே, காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவீந்திர தங்கேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அப்போது விழா மேடையில் பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மேடையிலிருந்து கீழே இறங்கியபோது, விரக்தியடைந்து பணியில் இருந்த காவலரை பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்லே கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சுனில் காம்லேவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் மீது ஐ.பி.சி பிரிவு 353 கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்லே ஏற்கனவே பெண் ஊழியரை துன்புறுத்திய சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.