states

img

அணையில் குளிக்க சென்ற 8 பேர் பலி

மகாராஷ்டிராவில் அணையில் குளிக்கச் சென்ற 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் பொஹர் தாலுகா நரிஹான் என்ற கிராமத்தில் நேற்று நடந்த குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் மாலை அப்பகுதியில் உள்ள பஹதுர் அணையில் குளிக்கச் சென்றனர். அப்போது அணையில் குளித்த 5 பெண்கள் நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். 
தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் 4 பேரை மீட்டுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல் புனேவில் சாஸ்காமான் அணியில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 
 

;