பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் நாசிக்கில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பழங்குடியினர் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்ற மகாராஷ்டிரா அரசுக்கு 3 நாள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் மார்ச் 2 முதல் போராட்டம் தீவிரமாகும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.