states

img

தேர்தல் பத்திர விவகாரத்தால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு

பெங்களூரு,மார்ச் 28- தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரு மான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக் காட்சி அலைவரிசை  ஒன்றுக்கு பரகலா பிர பாகர் அளித்த பேட்டியில், “தேர்தல் பத்திர  விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதைவிட அதிக வேகம் பெறும். தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகரமாக இந்த  விவகாரம் உருவெடுக்கும். பாஜக மற்றும் ஒன்றிய அரசைக் கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக தேர்தல் பத்திர விவகாரம் சென்றடையத் துவங்கிவிட்டது. இது இந்தி யாவில் நடந்த மிகப்பெரிய ஊழல், உல கிலேயே மிகப் பெரிய ஊழல் என்பதை  மக்கள் அனைவரும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சனையால், ஆளும் பாஜக அரசாங்கம் வாக்காளர் களால் கடுமையாகத் தண்டிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம னின் கணவரான பரகலா பிரபாகர் ஓர் அர சியல் பொருளாதார நிபுணர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் படித்த இவர், ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக பணி யாற்றி இருக்கிறார். இவரது மனைவி நிர்மலா சீதாராமன், பாஜகவில் ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தாலும், பரகலா  பிரபாகர் தொடர்ந்து பாஜகவின் தவறான  கொள்கைகளை கண்டித்தும், விமர்சித்தும் வருகிறார்.

ஒன்றிய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து இவர் எழுதிய கட்டுரைகள் சமீபத்தில் தொகுக்கப்பட்டு, ‘The Crooked Timber of New India: Essays  on a Republic in Crisis’ என்ற பெயரில் நூலாக வெளியானது. இந்தப் புத்தகம், மத்திய பாஜக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;