states

img

விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை சேகரித்து ‘எக்ஸ்போ சாட்’ சாதனை

பெங்களூரு, ஜன. 11 - இந்த ஆண்டின் முதல் நாள் (ஜன.1) இஸ்ரோ அனுப்பிய ‘எக்ஸ்போ சாட்’ செயற்கைக்கோள் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை முதல் முறையாக சேகரித்துள் ளது. இந்திய விண்வெளி ஆய்வு  மையமான இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக் கான செயற்கைக்கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன், விண்ணில் நிலைநிறுத்துகிறது.

அதன்படி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. - சி 58 ராக்கெட், 469 கிலோ எடை கொண்ட ‘எக்ஸ்போ சாட்’ செயற்கைக்கோளைச் சுமந்தபடி, ஜனவரி 1 அன்று காலை 9:10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.  

பூமியில் இருந்து புறப்பட்ட 22-ஆவது நிமிடத்தில் ராக்கெட் திட்டமிடப்பட்ட, 650 கி.மீ., தூர முள்ள புவி  வட்டப்பாதை யில், எக்ஸ்போ சாட் செயற் கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பின், ‘ஆப்’ செய்யப்பட்ட ராக்கெட் இயந்திரம் மீண்டும் இயக்கப் பட்டு, 350 கி.மீ., தொலைவுக்கு கீழே எடுத்து வரப்பட்டு, 10 ஆய்வுக் கருவிகள் உடைய சிறிய செயற்கைக் கோள், அந்த பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை சேகரித்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை இஸ்ரோ முதல் முறையாக சேகரித்துள்ளது. தரவுகளின் படி, கால்சியம், சல்பர், மெக்னீசியம், சிலிக்கான், ஆர்கான், நியான், இரும்பு ஆகியவை இருப்பது இதில் தெரியவந்துள்ளது.