states

img

ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்  

பெங்களூருவில் நடந்த மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு,  

கடந்த சீசன்களில் தனது மாயாஜால பந்து வீச்சால் பெரிதும் கவனத்தை ஈர்த்த வருண் சக்ரவர்த்தியை ஏலத்திற்கு முன்பாகவே ரூ.8 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தக்க வைத்தது. இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஷாருக்கானுக்கு மெகா ஏலத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.9 கோடிக்கு ஷாருக்கானை ஒப்பந்தம் செய்தது. ரூ.8.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.  

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.5.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்தது.

மேலும் சாய் கிஷோரை ரூ.3 கோடிக்கு குஜராத் அணியும், முருகன் அஸ்வினை ரூ.1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரை ரூ.1.4 கோடிக்கு குஜராத் அணியும் ஏலத்தில் எடுத்தன. இளம் வீரர்களான சஞ்சய் யாதவை ரூ.50 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோரை ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்தது. மேலும் இந்திரஜித்தை ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா அணியும் சாய் சுதர்சனை ரூ.20 லட்சத்திற்கு லக்னோ அணியும் ஏலத்தில் எடுத்தது.