பெங்களூரு, டிச.14- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத்தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்திருக்கும் ஒரே யொரு நபரான கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்கா யங்களுடன் பெங்களூரு வில் சிகிச்சை பெற்று வரு கிறார். கொடூரமான தீக்காயங் கள் என்பதால், வருண் சிங்கிற்கு தோல் மாற்று சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதற்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவ மனையிலுள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகத்திலிருந்து தோல் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. மருத்துவர் ஒருவர் கூறு கையில், தீக்காயமடைந்த நோயாளிகளுக்கு பயன் படுத்துவதற்கு முழுமையாக பதப்படுத்தப்பட்ட தோல் குறைவாகவே உள்ளது. எங்களிடம் இருந்தவற்றை கட்டளை மருத்துவமனை க்கு உடனடியாக வழங்கி விட்டோம். கமாண்ட் மருத் துவமனைக்கு (ராணுவ மருத்துவமனை) அதிக தோல் தேவைப்பட்டால் மும்பை அல்லது சென்னை யில் தோல் வங்கிகளில் இருந்து பெறலாம் என்றார். பெறப்பட்ட தோலை உட னடியாகப் பயன்படுத்த முடி யாது, ஏனெனில் அதை இரசா யன மற்றும் நுண்ணுயிர் சுத்திகரிப்பு செயல்முறை க்கு உட்படுத்த வேண்டும், இதற்கு குறைந்தபட்சம் எட்டு வாரங்கள் ஆகும். தீக் காயமடைந்த நோயாளியின் சிகிச்சைக்காக தோல் வங்கி யால் தோல் வழங்கப்படுவ தற்கு முன் அதை சோதனை க்கு உட்படுத்த வேண்டுமென் கின்றனர் மருத்துவர்கள்.