பெங்களூரு, மே 3 - அனுமனைப் பஜ்ரங் தளத்துடன் ஒப்பிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக் கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி செவ்வாயன்று வெளியிட்டது. அதில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், “கர்நாட காவில் பல்வேறு மத அடிப்படை யிலான வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக இருந்து வரும் பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை விதிக்கப்படும்” என்று அறிவித்திருந்தது. இது சங்-பரி வாரங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிஎப்ஐ அமைப்புடன் பஜ்ரங் தளத்தை ஒப்பிடுவதா? என்று விஎச்பி கேள்வி எழுப்பியிருந்தது. பிரதமர் மோடியும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு முன்பு ராமர் பிரச்சனையாக இருந்தார்.
இப்போது அவர்கள் அனு மனை பிரச்சனையாக்கி தேர்தல் அறி க்கையில் அடைத்துள்ளனர். அதனால் தான் பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். அவர்களுக்கு ஜெய் பஜ்ரங் பலி என்று சொல்வோர் இப் போது பிரச்சனையாகத் தெரி கிறார்கள்” என்று கூறியிருந்தார். அதாவது, மதத்தைப் பயன்படுத்தி வன்முறை நடத்தும் பஜ்ரங் தளம் என்ற அமைப்பிற்குத் தடை விதிப்பது, கடவுள் அனுமனுக்கே தடை விதிக்கும் செயல் என்று வழக்கம்போல பிரதமர் மோடி சிண்டு முடிந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். “பகவான் அனுமன் பக்தியின் வடிவமாக இருக்கிறார்; மரி யாதை மற்றும் கடமைக்கான அர்ப்ப ணிப்பின் வடிவமாக திகழ்கிறார்; பகவான் அனுமன் சேவை மற்றும் தியாகத்தின் குறியீடாக இருக்கிறார். அவ்வாறிருக்கையில், அவரை எந்த வொரு தனிநபருக்கும் அல்லது அமைப்புக்கும் இணையாக ஒப்பிடு வதன்மூலம் அவமதித்து, அனுமன்ஜி யின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பிரதமர் மோடி புண்படுத்துகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “அனுமனைப் பஜ்ரங் தளத்துடன் ஒப்பிட்டதற்காக பிரதமர் மோடி மன்னி ப்பு கேட்க வேண்டும். லட்சக்கணக்கான அனுமன் பக்தர்கள் இதை முழுமை யாகவும், கடுமையாகவும் எதிர்த்துப் போராடுவார்கள்” என்று குறிப்பிட்டுள் ளார்.