states

img

ஹிஜாப் தடையால் முஸ்லிம் மாணவிகள் ஆப்செண்ட்? கர்நாடகத்தில் 21 ஆயிரம் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவில்லை!

பெங்களூரு, மார்ச் 29 - கர்நாடகா மாநிலத்தில் திங்களன்று தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொது த்தேர்வை 20 ஆயிரத்து 994 மாணவ - மாணவியர் எழுதவில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. கர்நாடக மாநிலத்திலுள்ள கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கு அங்குள்ள பாஜக அரசு திடீரென தடை விதித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவியர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வு, “கர்நாடக மாநில அரசு  பிறப்பித்த உத்தரவு செல்லும்” என்றே தீர்ப்பளித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளை கவனத்தில் கொள்ளாமல், குர்-ஆனில் ஹிஜாப் கட்டாயம் ஆக்கப்பட வில்லை என்று கூறி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே, பாதிக்கப்பட்ட மாணவி யர் தற்போது உச்சநீதிமன்றத்தை நாடி யுள்ளனர். இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் துவங்கிய நிலையில், முஸ்லிம் மாணவியர், ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே தேர்வில் பங்கேற்க முடியும் என்று கர்நாடக அரசு கூறிவிட்டது.

ஏற்கெனவே பள்ளிக்குச் செல்ல முடியாத இஸ்லாமிய மாணவிகள், கர்நாடக  அரசின் தடையால் தேர்வுகளிலும் பங்கேற்க  முடியாத நிலை ஏற்பட்டது.  கர்நாடகத்தில் திங்களன்று துவங்கிய பத்தாம் வகுப்புத் தேர்வை 8 லட்சத்து 48 ஆயிரம் மாணவ - மாணவியர் எழுதிய நிலையில், 20 ஆயிரத்து 994 மாணவியர் தேர்வில் பங்கேற்கவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் மாணவியராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  ஆனால் ஹிஜாப் தடை காரணமாக முஸ்லிம் மாணவிகள் எத்தனை பேர் தேர்வு எழுதவில்லை என்கிற விவரம் வெளியிடப்பட வில்லை.  99.9 சதவிகித மாணவியர் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதியதாக மட்டும் கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறியுள்ளார். மேலும், தேர்வெழுதாத மாணவி களுக்கு ‘ஆப்செண்ட்’ போடப்பட்டுள்ளதாக வும், அவர்களுக்கு மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் முஸ்லிம் மாணவியரின் கல்வி பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது.