பெங்களூரு
கர்நாடகாவில் உள்ள 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பல்வேறு நகர்ப்புற அமைப்புகளின் 9 வார்டுகள் மற்றும் 57 கிராம பஞ்சாயத்துகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 27 அன்று நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (டிச., 30) காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆளும் பாஜக முன்னலையில் இருந்தது. இதனால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் எல்லாம் தலைகீழாக மாறியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் திடீரென பாய்ச்சல் வேகத்தில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி முன்னிலை விபரம்:
➥காங்கிரஸ் - 501 இடங்கள்.
➥பாஜக - 431.
➥மதச்சார்பற்ற ஜனதாதளம் : 45.
➥மற்றவர்கள் : 207.
அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்து வென்று விடலாம் என எண்ணிய பாஜகவிற்கு காங்கிரஸ் பலத்த அடி கொடுத்துள்ளது.