states

img

தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு, ஆக. 21 - தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து திங்களன்று செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “கர்நாட காவில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வி யாளர்கள், அரசு உயர் அதிகாரி கள் ஆகியோரு டன் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2021இல் கொண்டு வரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் பாஜக ஆளும் பல மாநிலங்கள்கூட இதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த கல்விக் கொள்கையை ஏற்கவில்லை. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கெனவே நிராகரித்துவிட்டன. நாங்களும் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். ஏனெ னில், கர்நாடகாவில் ஏராளமான உயர் கல்வி நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. கர்நாடகா அறிவு  சார் மையமாக உள்ளது. நாங்கள் ஏற்கெனவே அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி கர்நாடக மாநில மாணவர்களின் நலன் கருதி தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது” என அவர் கூறினார்.