பெங்களூரு, மார்ச் 21- உக்ரைன் மீதான ரஷ்ய படையினரின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் பெங்களூ ருவுக்கு கொண்டு வரப் பட்டது. உக்ரைனின் கார்கிவ் நகரில் மார்ச் 1-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் அங்கு மருத்துவம் படித்து வந்த கர்நாடக மாநி லத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் உயிரிழந் தார். அவரது உடல் உக்ரை னில் உள்ள மருத்துவமனை யில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நவீன் சேகரப்பா உடல் விமானம் மூலம் திங்களன்று அதி காலை பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் நவீன் உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தினார். இதையடுத்து நவீனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகளுக்கு பின்னர் மருத்துவப் படிப் பிற்காக எஸ்எஸ் மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது.