states

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: 65 சதவிகித வாக்குகள் பதிவு

பெங்களூரு, மே 10 - கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் புத னன்று மிகுந்த விறுவிறுப்புடன் நடந்து முடிந்துள் ளது. ஓரிரு இடங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவு செய்தனர். காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 அன்று ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கிய நிலையில், பிரதான கட்சிகளான பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 217 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆம் ஆத்மியும் 209 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் தவிர 918 சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்கினர்.

224 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளா்கள் களம் கண்டனர். இவர்களில் பெண் வேட்பாளா்கள் 184 போ். திருநங்கை ஒருவராவார். இத்தேர்தலில் மொத்தம் 5 கோடியே 21 லட்சம் பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருப்பதாகவும், இவர்களில் 9 லட்சத்து 17 ஆயிரம் பேர் முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்கள், வாக்காளர்களுக்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி புதன்கிழமையன்று காலை 7 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. ஆரம்பம் முதலே மக்கள் மிகுந்தஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்குகளைப் பதிவு செய்தனர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலை வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தனது மனைவி ராதா பாய் கார்கேவுடன் குல்பர்கா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கர்நாடக மக்கள் சோர்ந்து போயி ருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர  வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆட்  சிக்கு வந்தால் முதல் அமைச்சரவையி லேயே 5 முக்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றுவோம். தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்’ என்றார்.  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்க ளித்தார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஷிகான் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார். 

ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்குகளைப் பதிவு செய்தனர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலை வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தனது மனைவி ராதா பாய் கார்கேவுடன் குல்பர்கா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கர்நாடக மக்கள் சோர்ந்து போயி ருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர  வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆட்  சிக்கு வந்தால் முதல் அமைச்சரவையி லேயே 5 முக்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றுவோம். தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்’ என்றார்.  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்க ளித்தார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஷிகான் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.