states

சந்தேகத்திற்குரிய நபர்கள் வீட்டைச்சுற்றி நடமாடுவதாக கௌரி லங்கேஷ் கூறினார்

பெங்களூரு, ஜூலை 6- சமூக செயற்பாட்டாளர், மூத்த பத்திரிக்கையாளர், கௌரி லங்கேஷ் தொடர்ந்து இந்துத்துவா  அரசியல், வகுப்பு வாத அரசியலுக்கு  எதிராக செயல் பட்டு வந்தார். இவர் பெங்களூ ரில் அடையாளம் தெரியாத நபர் களால் 2017 ல் சுட்டுக் கொல்லப் பட்டார். மே 27 ஆம் தேதி தொடங் கிய விசாரணையில் கர்நா டக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் சிறப்பு நீதி மன்றத்தில் திங்கள் கிழமை கௌரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் தனது வாக்கு மூலத்தைப் பதிவு செய்தார். கௌரி லங்கேஷின் படு கொலை வழக்கின் புகார் தாரர் கவிதா லங்கேஷ். அவர் கொல்லப்படுவதற்கு ஒரு  வாரத்திற்கு முன் சந்தேகத் திற்குரிய நபர்கள் தனது வீட்டினைச் சுற்றி நடமாடுவதாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதை  பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை என்று நீதி மன்றத்தில் கூறினார். அவருடைய அம்மா விற்கு 2017 செப்டம்பர் 5  அன்று, கௌரி வீட்டின் அருகாமையில் இருப்பவர்கள் மூலம் அழைப் பின் மூலம் அவர் “படு கொலை செய்யப்பட்டார் ”என்பது அவ ரது அம்மாவிற்குத் தெரிவிக்கப் பட்டது என்றும் அவர் அங்கு செல்லும்போது, கௌரி சுடப் பட்டதாக தொலைக்காட்சி சேனல் களில் இருந்து அழைப்பு வந்தது. என்றும்  பல தோட்டாக்களால் அவர் படுகொலை செய்யப் பட்டதை பார்த்ததாக கவிதா லங்கேஷ் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் களின் சார்பில் ஆஜரான வழக் கறிஞர்களின் குறுக்கு விசார ணையில் கேட்கப்பட்ட கேள்வி களுக்கு அவர் கொலை செய்யப் படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்த போது இருவருக்கு மிடையில்  சண்டை ஏற்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அவர்  மறுத்தார்.  அவரது உடன் பிறப்புகளுக்கு இடையில் எந்த  சொத்து தகராறு இல்லை என்றும்  தனது சகோதரிக்கு நக்சல் களால் எந்த ஆபத்தும்  ஏற்பட வில்லை என்று கூறினார். இதற்கு முன்பாக சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.பாலன் இந்த வழக்கில் பேராசிரியர். பக வான் கொலை முயற்சி வழக்கு  மற்றும் கௌரி கொலை வழக்கு களில் முக்கிய குற்றவாளியான ஏ-17 கே.டி நவீன். குமாரின் கூட்டாளியான முக்கிய சாட்சி யினை விசாரித்தார்.  சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்ற அறையில் இருந்த நான்கு முக்கிய குற்றவாளிகளான நவீன்  குமார் மற்றும் ஏ-13 சுஜித் குமார்  என்ற பிரவீன், ஏ-1 அமோல் காலே மற்றும் ஏ-5 அமித் தேக்வேகர் ஆகியோரை அடையாளம் காட்டினார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். என்றும் இந்த வழக்கின் விசாரணையை ஒவ்வொரு மாதமும் இரண்டா வது வாரத்தில் ஒரு வாரம் அதா வது 5 நாட்கள் முழுவதும்  நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதி மன்றத்திற்கு தலைமை தாங்கும் ஜோஷி  உத்தரவிட்டார்.