states

img

மதபோதகர் மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கொடூரம்!

பெங்களூரு, ஜன.3- கர்நாடக மாநிலத்தில், ஆளும் பாஜக அரசு மதமாற்றத் தடைச் சட்டத் தைக் கொண்டு வந்துள்ள நிலையில், விஎச்பி, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந் துத்துவா அமைப்புகள், கிறிஸ்தவர் களை, அதிலும் குறிப்பாக தலித் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.  அண்மையில், தும்கூரில் கிறிஸ்து மஸையொட்டி பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த தலித் குடும்பத்தி னரை, பஜ்ரங் தள் குண்டர்கள் வீடு புகுந்து மிரட்டினர். ஆனால், அவர் களை தலித் பெண்கள் ஒன்று சேர்ந்து விரட்டியடித்தனர். இந்நிலையில், பெலாகவி மாவட் டம் துக்கனட்டி எனும் கிராமத்திலும் சங்-பரிவாரங்கள் தலித் கிறிஸ்தவக்  குடும்பம் மீது கொலைவெறித் தாக்கு தல் நடத்தியுள்ளனர். துக்கனட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் அக்ஷய்குமார் கர கன்வி. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் கிறிஸ்தவ மதபோதகராக இருக்கிறார்.

 கடந்த டிசம்பர் 29 அன்று பகல் 1 மணியளவில் அக்ஷய்குமார் கர கன்வி தனது வீட்டில் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தபோது, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த 7 பேர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்ஷய் குமாரையும் 3 பெண்கள் உட்பட 5 பேர் கொண்ட குடும்பத்தினரை மிகமோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், வீட்டின் அடுப்பங்கரையில் கொதித் துக் கொண்டிருந்த சாம்பரைக் கொண்டு வந்து, அக்ஷ்ய் குமாரின் மனைவி பாரதி மீது ஊற்றியுள்ளனர். இதில், பாரதிக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தற்போது இந்துத்துவா குண்டர்கள் 7 பேர் மீது கலவரத்தில் ஈடுபடுதல், அத்துமீறி நுழைதல், கிரிமினல் சதி, வன் கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் காதாபிரபா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.