பெங்களூரு, மார்ச் 28 - கர்நாடக சட்டப்பேரவை பதவிக் காலம் மே 24-ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், ஒன்றரை மாதத் திற்குள் அங்கு தேர்தல் நடத்தி முடிக்கப் பட்டாக வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படா விட்டாலும், ஆளும் பாஜக 6 மாதத்திற்கு முன்னதாகவே தேர்தல் வேலை களைத் துவங்கிவிட்டது. எனினும், பாஜக ஆட்சியில் கர்நாட கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள ஊழல் முறைகேடுகள், மதவாதத் தாக்கு தல்கள், உட்கட்சி மோதல் ஆகியவற் றால் இம்முறை பாஜக வெல்வது கடி னம் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறு கின்றன. வெற்றிபெறுவதற்கு காங்கிர சுக்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும் அந்த கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனால், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பாஜக, கடைசிக் கட்டமாக சாதி மற்றும் மத அடிப்படை யிலான வாக்குகளை குறிவைத்து பல்வேறு சித்துவேலைகளில் இறங்கி யுள்ளது. குறிப்பாக பெரும்பான்மை மதம் மற்றும் சாதியினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில், முதல்வர் பசவ ராஜ் பொம்மை தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 2பி அந்தஸ்தில் உள்ள மத சிறு பான்மையினருக்கான (முஸ்லிம்) தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப் பட்டது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மேலும், பொருளாதார ரீதியாக நலிவுற்ற உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) இடஒதுக்கீட்டில்தான் - அதாவது, இதில் பிராமணர்கள், வைசியர்கள், முதலியார்கள், ஜெயின் உள்ளிட்ட சமூகத்தினருடன் முஸ்லிம்கள் இனி போட்டியிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதேபோல இடஒதுக்கீட்டு பட்டிய லில் ஒக்கலிகர் சமூகத்திற்கு 2சி அந்தஸ்தும், லிங்காயத் சமூகத்திற்கு 2டி அந்தஸ்தும் வழங்கப்பட்டு, முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட 4 சதவிகித இடஒதுக்கீடானது, இந்த இரு பிரிவினருக்கும் தலா 2 சதவிகிதம் என்ற அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டது. பாஜக அரசைப் பார்த்தீர்களா, நாங்கள் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து, இந்துக் களுக்கு (லிங்காயத், ஒக்கலிகா சாதி யினருக்கு) வழங்கியிருக்கிறோம் என்று பெருமை பீற்றியது. முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது காங்கிரசின் வாக்கு அரசியல் என்றும், அந்த வாக்குகளைப் பற்றிக் கவலைப் படாமல் அதனை நாங்கள் செய்துள் ளோம் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாகவே கூறினார். முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பறித்ததன் மூலம் ஒக்கலிகர்களுக்கான இடஒதுக்கீடு 6 சதவிகிதமாகவும், லிங்காயத் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு 7 சதவிகிதமாகவும் உயர்த்தப் பட்டு உள்ளது என்று பெரும்பான்மை சமூகப்பிரிவினரின் வாக்குகளுக்கு அடிபோட்டது.
முஸ்லிம்களுக்கான இடஒதுக் கீட்டை எதிர்த்து சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம்; நீதிமன்றத் திற்குச் செல்வோம் என்று வக்பு வாரியம் அறிவித்துள்ளது ஒருபுற மிருக்க, முஸ்லிம்களின் இடஒதுக் கீட்டைப் பறித்துத்தான் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டு மானால், அப்படியொரு இடஒதுக்கீடு தேவையில்லை என்றும், அடிப்படை யில் இந்த இடஒதுக்கீடு, எங்கள் சமூகத்தினரை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தும் முயற்சி என்றும் லிங்காயத்துக்கள் கொதித்தெழுந்த னர். பஞ்சமசாலி லிங்காயத்துக்களைப் பொறுத்தவரை, ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இடஒதுக்கீட்டில் பிரிவு 3பி-ல் 5 சதவிகித இடஒதுக்கீடு பெறுவதை மாற்றி 2ஏ-க்குள் தங்களை கொண்டு வந்து 15 சத விகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. இதற்காக பஞ்சமசாலி லிங்காயத்துகள் பிரம்மாண்ட போராட்டத்தையும் கடந்தாண்டு நடத்திக் காட்டினர். இதனால், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டில், லிங்காயத்துக்கள், ஒக்கலிகா கவுடா ஆகிய பிரிவினருக்கு 6 சத விகிதத்தை வழங்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டது. ஆனால், இந்த முடி வுக்கு கர்நாடக பிராமணர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பயந்து போன கர்நாடக பாஜக அரசு, இதுதான் நேரமென்று முஸ்லிம்களுக்கு இருந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை பறித்தது.
இந்த விஷயத்தில், பஞ்சமசாலி லிங்காயத்துகள் வெளிப்படையாகவே கர்நாடக பாஜக அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அனைத்திந்திய பஞ்சமசாலி லிங்காயத்து அமைப்பை சேர்ந்த விஜயானந்த் காஷப்பா என்பவர் தனது பதவியையே அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். பெங்களூரு நகரில் நடைபெற்ற பஞ்சமசாலி லிங்காயத்துக் கள் கூட்டத்தில் பேசிய விஜயானந்த் காஷப்பா, “முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து பஞ்ச மசாலி லிங்காயத்து பிரிவினருக்கு வழங்குவதை ஏற்க முடியாது; எனவே என்னுடைய பதவியை உடனே ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்துள்ளார். சுற்றியிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சித் தும் எதுவும் பலனளிக்கவில்லை. கர்நாடக மக்கள் தொகையில் லிங்காயத்துக்கள் 18 சதவிகிதம் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இந்த லிங்காயத்துக்களிலும், சுமார் 60 சதவிகிதம் என்ற அளவில் இருப்பவர் கள்தான் பஞ்சமசாலி லிங்காயத்துக் கள் ஆவார்கள். அவர்கள், பாஜக-வின் பிரித்தாளும் அரசியலில் சிக்காமல், லிங்காயத்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தற்போது குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஒக்கலிகா மற்றும் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த மக்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் ஏழைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களாக கருதப்படும் முஸ்லிம்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டை பறித்து தங்களுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்கமாட் டார்கள். பாஜக தப்புக் கணக்கு போட்டி ருக்கிறது. அது தேர்தல் முடிவில் தெரியவரும் என்றும் பெங்களூரு கூட்டத்தில் எச்சரித்துள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளேயே மற்றொரு அதிர்ச்சியும் ஆளும் பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ளது. அது பஞ்சாரா சமூக மக்களின் போராட்டமாகும். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைத்தது போலவே, பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டையும் கர்நாடக பாஜக அரசு மாற்றியமைத்தது. பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15-இல் இருந்து 17 சதவிகிதமாக உயர்த்திய கர்நாடக பாஜக அரசு, இந்த இடஒதுக்கீட்டில் பட்டியல் சாதி யின் இடது பிரிவினருக்கு 6 சதவிகி தம், பட்டியல் சாதியின் வலது பிரி வினருக்கு 5.5 சதவிகிதம், தீண்டத் தகுந்தவருக்கு 4.5 சதவிகிதம், பட்டி யல் சாதிப்பிரிவில் உள்ள மற்றவர் களுக்கு 1 சதவிகிதம் என உள்ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் பட்டியல் வகுப்பின ருக்கான இடஒதுக்கீட்டில் மேற் கொள்ளப்பட்ட இந்த உள்ஒதுக்கீட் டிற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பட்டியல் வகுப்பிலுள்ள பஞ்சாரா பிரி வினர் இதற்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வீட்டின் மீதும் கற்களை வீசி, மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிகாரிப்புராவில் உள்ள அம்பேத் கர் சதுக்கத்திலிருந்து மினி விதான சவுதாவை நோக்கி பேரணியாக புறப்பட்ட பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பஞ்சாரா மக்கள், வழிநெடுகிலும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நா டக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகி யோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். மேலும், இந்தப் பேரணி எடியூரப்பா வீட்டைக் கடந்த போது, ஆவேசமடைந்த பஞ்சாரா மக்கள், அங்கிருந்த மோடி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோரின் படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள், கொடிகளை கிழித்து தீவைத்து எரித்ததுடன், எடியூரப்பா வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் எடியூரப்பா வீட்டின் ஜன்னல் கண்ணா டிகள் உடைந்து சேதம் அடைந்தன. மேலும் 10 போலீசார் காயம் அடைந்துள்ளனர். எடியூரப்பா வீடு இருந்த பகுதியே கலவரக் காடான நிலையில், ஷிமோகாவிலிருந்து கூடு தல் போலீசார் வரவழைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் பஞ்சாரா மக்கள் மீது தடியடி நடத்தி கூட்ட த்தைக் கலைத்துள்ளனர். இந்த தடி யடியின் போது பெண் ஒருவர் நெரிச லில் மிதிபட்டு காயம் அடைந்துள்ளார். தற்போது சிகாரிபுரா பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 1000 போலீசார் பாதுகாப்பு க்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
2005-ம் ஆண்டு காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஜே. சதாசிவம் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படை யில்தான் தற்போதைய உள்ஒதுக்கீடு முடிவு எடுக்கப்பட்டது என்று சமா ளித்தாலும் பட்டியல் வகுப்பு மக்கள் ஏற்கத்தயாரில்லை. குறிப்பாக தங்கள் பிரிவு மக்கள் அதிகமாக பாதிக்கப் படுவார்கள் என்று பஞ்சாரா பிரிவினர் கூறுகின்றனர். இதையடுத்து பஞ்சாரா பிரிவு மக்களை சமாதானப்படுத்தும் முயற்சி யில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா இறங்கியுள்ளார்.
“சிகாரிப்புராவில் எனது வீட்டின் மீது பஞ்சாரா சமூகத்தினர் கல்வீசி தாக்கியது எனக்கு வருத்தத்தை ஏற் படுத்தியுள்ளது. தாண்டா (குக்கிரா மம்) வளர்ச்சி வாரியத்தை நான் முதல்- மந்திரியாக இருந்தபோது அமைத்து கொடுத்தேன். இட ஒதுக்கீடு விஷ யத்தில் பஞ்சாரா சமூகத்தினர் அர சின் முடிவை தவறாக புரிந்து கொண்டுள் ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் சரிசெய்யப்படும். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயா ராக உள்ளோம். சமூக விரோதிகளின் பேச்சை அவர்கள் கேட்கவேண்டாம். அந்த சமூகத்தின் நியாயத்தை நிலை நாட்டும் பணியை நான் செய்வேன். அசம்பாவித சம்பவங்களில் யாரும் ஈடுபட வேண்டாம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நான் 4 முறை முதல்வர் ஆனதற்கு பஞ்சாரா சமூகத்தினரும் காரணம் என்பதை நான் அறிவேன். புதன்கிழமை சிகாரிபுராவுக்கு சென்று சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து பேசுவேன். தற்போதைக்கு யார் மீதும் குறை சொல்ல மாட்டேன். நான் போலீஸ் அதிகாரிகளுடன் தொலை பேசியில் பேசி, யார் மீதும் அவசரப் பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன். எனது வீட்டின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் யாரும் பின்னணியில் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று எடியூரப்பா நீட்டி முழக்கி யுள்ளார். எனினும், தாங்கள் பற்ற வைத்தது, இந்த அளவிற்கு பற்றிப் பரவும், அது தங்களுக்கு எதிராகவே திரும்பும் என்று எதிர்பாராத பாஜக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், அதிர்ச்சியில் உறைந்துள்ளது.