states

img

பயோகான் தலைவர் எச்சரிக்கை! பெங்களூருவின் ஐ.டி. தலைமையை வகுப்புவாதம் அழித்து விடும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.1-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மாநிலக்குழுவிலிருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அரியலூர்-பெரம்பலூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லத்துரை ஆகியோருக்கு கைத்தறி ஆடை, சால்வைகள் அணிவித்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பாராட்டினார்.

மாநாட்டிற்கான இலச்சினையை வடிவமைத்த கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த லெனின்பாபு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியக் கலை ஞர்கள் வெண்புறா, ரஹ்மத், பாண்டியராஜன்,  மாநாட்டிற்காக இயற்றப்பட்ட பாடல் களை குறுகியகாலத்தில் வெளியிட உதவிய  சமூக வலைத்தளக்குழுவைச் சேர்ந்த  ஆனந்த் காஸ்ட்ரோ, ஆர்.ஜே.பிரசாந்த், மூன்று நாள் மாநாட்டில் உணவு சமைத்தளித்த மெரீனா ஆறுமுகம், சிவானந்தம் உள்ளிட்டோரை பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள்  பாராட்டி கௌரவித்தனர்.மாநாட்டு ஓவியப்பணிகளில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வ.செந்தில், ஜான், மதுரை பூமிராஜா ஆகியோரையும் தலைவர்கள் பாராட்டினர்.