7 கட்டமாக நடைபெற்று வரும் 18ஆவது மக்களவை தேர்த லில் இதுரை 3 கட்டத்தின் மூலம் 283 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.இந்த 283 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 188 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பாஜக 95 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என புல னாய்வு ஊடகங்கள் மற்றும் அர சியல் கட்சிகளின் ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இன் னும் 4 கட்ட தேர்தல் உள்ள நிலை யில், தங்களுக்கு தோல்வி உறுதி என உணர்ந்து கொண்ட மோடி உள்ளிட்ட பாஜகவினர் இந்து - முஸ்லிம் வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சு, பாகிஸ்தான் தொடர்பான பேச்சு, “இந்தியா” கூட்டணிக் கட்சிகளை வைத்து பொய் தகவல்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவின் இழிவான பேச்சை நாட்டு மக்கள் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தங்களுக்கு ஆதரவாக உள்ள “கோடி மீடியா” ஊடகங்கள் மூலம் மதவெறி வகுப்புவாதத்தை பரப்பி தேர்த லுக்கு முன் வன்முறையை கிளப்பு வதில் பாஜக தீவிரமாக உள்ளது.
பாகிஸ்தான் கொடி
இதன் முதல்படியாக கர்நாடகா வில் ஊடகங்கள் மூலம் இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதலை தூண்டும் முனைப்பில் செய்தி தொகுப்பு ஒன்று வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் முக்கிய செய்தி சேனலாக உள்ளது “ஆசியா நெட் சுவர்ணா” சேனல். இந்த செய்தி நிறு வனம் கடந்த மே 9 அன்று மோடி அரசின் இந்து - முஸ்லிம் மக்கள் தொகையின் புள்ளிவிபரத்தை வைத்து ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டது. இந்த தொகுப்பை ஆசியா நெட் சுவர்ணாவின் செய்தி தொகுப்பாளர் அஜித் ஹனமக்கன வர் வழங்கிய நிலையில், செய்தி தொகுப்பில்,”நாட்டில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் இந்து மக்களின் எண்ணிக்கை கடும் சரிவை கண் டுள்ளதாகவும், அதே நேரத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாகவும்” என சர்ச் சைக்குரிய வகையில் கூறப்பட்டது. மேலும் இந்து மக்களின் எண்ணிக் கையை காட்டும் கிராபிக் திரை யில் இந்திய தேசிய கொடியும், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை காட்டும் கிராபிக் திரையில் பாகிஸ் தான் கொடியும் வைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தன. ஆசியா நெட் சுவர்ணா செய்தி சேனலை கன்னடர்கள் பார்க்க வேண்டாம் என சமூகவலை தளங்களில் கருத்துக்கள் குவிந் தன.
கண்டனங்கள் குவிந்ததால் அலறிய ஆசியா நெட் சுவர்ணா நிறு வனம் முஸ்லிம் மக்களின் எண் ணிக்கை காட்டும் கிராபிக் திரையில் உள்ள பாகிஸ்தான் கோடியை நீக்கி யூடியூப் சேனலில் மட்டும் மத அடையாள சின்னங்களுடன் இந்து - முஸ்லிம் கிராபிக் திரை ஒளி பரப்பப்பட்டது. மேலும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்ப தாக ஆசியா நெட் சுவர்ணா கூறி யது. ஆசியா நெட் சுவர்ணா சேனல் நிறுவனம் மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? என என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் விடாமல் கண்டனத்தை பதிவு செய்து வருகின்ற்னர்.
ஒன்றிய பாஜக அமைச்சருக்கு சொந்தமான சேனல்
ஆசியா நெட் சுவர்ணா சேனல் கன் னட மொழயில் மட்டும் ஒளிபரப் பாகும் செய்தி சேனல் ஆகும். இதன் உரிமையாளராக ஜூபிடர் கேபிடல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவன மாக இருந்தாலும், இந்த செய்தி நிறு வனத்தின் பெரும்பான்மையான பங்கு ஒன்றிய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்தி ரசேகரிடம் உள்ளது. இவருக்கு தெரியா மல் மற்றும் தொடர்பு இல்லாமல் “இந் திய முஸ்லிம் மக்களுக்கு பாகிஸ்தான் கொடி” கிராபிக் திரை ஒளிபரப்பாக வாய்ப்பில்லை என்பதால், இந்து - முஸ்லிம் மக்களிடையே மத வன்முறையை கிளப்பும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது தெளிவாக உணரப்படுகிறது.