புதுதில்லி, டிச.22- 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்றும், 100 நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் திமுகவைச் சேர்ந்த மாநிலங்க ளவை உறுப்பினர் எஸ். கல்யாண சுந்தரம் கோரினார். மாநிலங்களவையில் நிதி சட்ட முன்வடிவு மீது பேசிய திமுக உறுப்பி னர் எஸ். கல்யாணசுந்தரம் தன்னுடைய கன்னிப்பேச்சில் கூறியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்ததை விட, உரங்களின் விலை, பொட்டாஷ், யூரியா, டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் போன்ற வைகளின் விலைகள் பத்து மடங்கு அதிக மாக உள்ளது. ஆனால், விவசாயிகளின் உற்பத்திப் பொருளான நெல்விலையோ, கோதுமை விலையோ, கரும்பின் விலையோ அல்லது சிறு தானியங்களின் விலையோ அந்த அளவுக்கு உயரவில்லை. இதற்கு ஈடுகட்டும் அளவிற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன் ஆணை யத்தின் பரிந்துரையின்படி விவசாயப் பொருட் களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை. இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை மீட்டெடுக்கவும், இந்த அரசு எந்த வொரு தேவையான, சரியான, தெளி வான திட்டங்களைக் கொண்டு வர வில்லை. ஒட்டுமொத்தமாக இந்த அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது.
150 நாட்கள் பணி
நாட்டு மக்களின் அடிப்படை உரிமை களில் ஒன்றான ஏழை மக்களுக்கு வேலை கொடுக்கும் உரிமையை அடிப்படை யாகக் கொண்டு, 100 நாள் வேலை என்கிற மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கான நிதியை காலத்தே ஒதுக்காமல் அந்த ஏழை எளிய மக்களுக்கு உள்ள உரி மையை இந்த அரசு பறித்து வருகிறது. அவர் களுக்கு 100 நாட்களுக்குப் பதிலாக 150 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் இருந்து வரு கிறது. தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டு களுக்கும் மேலான ரயில்வே பாதை, விழுப்புரம்-தஞ்சை ரயில் பாதை இரட்டை ரயில்பாதையாக இன்னமும் மாற்றப் படவில்லை. அதே போல் மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதையைப் புதுப் பிக்கும் கோரிக்கையும், சென்னை-தஞ்சா வூர் இடையே இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும்விட வேண்டும் என்கிற கோரிக்கை யும் நிலுவையில் இருந்து வருகின்றன. இவற்றை உடனே முடிக்க வேண்டும் மேலும் ஒன்றிய அரசு நிறுவனங்களான ரயில்வே, நெய்வேலி, பெல் போன்ற நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை ஒதுக்க வேண்டும் விவசாயம் சார்ந்த மாடு வளர்ப்பு, பால் பதப்படுத்துதல், மீன்வளர்த்தல், உணவுப் பொருட் களைப் பதப்படுத்துதல், நெல் அரவை தொழிற் சாலை, கடலை, தேங்காய், எள் போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைகளை மேற்கொள்ள மாநில அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு உதவியாக ஒன்றிய அரசு இருந்திட வேண்டும். விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக கரும்பு பயிரிடுவதால், நெல் லைப் போல் கரும்பு விவசாயிகளுக்கும் மானி யங்கள் வழங்கிட கரும்பு வளர்ச்சி நிதி யைத் தொடர வேண்டும் தஞ்சை மாவட்டத்தில் மூடப்பட்ட கரும்பாலை களைத் திறப்பதற்கு, மாநில அரசுடன் கலந்து பேசி ஒன்றிய அரசு நிதி உதவி செய்திட வேண்டும். தஞ்சை டெல்டா மாவட்டத்தில் ரயில்வே நிலையங்கள் அருகே பயன்படுத்தப் படாத நிலங்கள் உள்ளன. அதில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும். நெல் மற்றும் இதர பொருட்களை ரயில்வே மூலம் எடுத்துச் செல்ல வசதி யாக ரயில்வே துறை மூலம் குடோன் அமைத்தால் ரயில்வேக்கு வருமானம் கிடைத்திடும். தஞ்சை மாவட்டத்தில் 20 கிராமங்களை டிஜிடல் கிராமங்களாக அறிவிக்க வேண் டும். இவ்வாறு எஸ்.கல்யாணசுந்தரம் பேசினார்.