தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாக குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற 230வது மத்திய வாரிய குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு 5 கோடிக்கும் அதிகமான பி.எப் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1977-78 கால கட்டத்திற்கு பின் மிக குறைந்த வட்டி விகிதமாக இது பார்க்கப்படுகிறது. அப்போதைய வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்ததே மிக குறைந்த வட்டி விகிதம் ஆகும்.
கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக மிகவும் குறைவாக பி. எப் மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.